For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரள ஸ்டிரைக்-தமிழகத்திக்கு பெட்ரோல் கட்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:கேரளத்தில் 5வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருவதால் தமிழகத்தின் பலபகுதிகளுக்கு பெட்ரோல் வருவது தடைபட்டுள்ளது. ஸ்டிரைக் நீடித்தால் இரு நாட்களில் பெட்ரோல் தட்டுப்பாடுஏற்படலாம் எனத் தெரிகிறது.

கேரளத்தில் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கேரளம் செல்லும் கனரகவாகனங்களில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை நவம்பர் 1ம் தேதிக்குள் பொறுத்த வேண்டும் என கேரள அரசுஉத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிறுக்கிழமை முதல் கேரளாவில் லாரிஉரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தமிழக்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில்கார்ப்பரேஷன், ஐபிபி மற்றும் ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனங்களுக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ளஎண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் முற்றிலும் நின்று விட்டது.

இதையடுத்து கையிருப்பில் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந் நிலையில்கையிருப்பு எண்ணெய் இன்னும் இரண்டு நாட்களுக்கு மட்டும் தான் வரும். அதன் பின் பெட்ரோல் தட்டுப்பாடுஏற்பட வாய்ப்பு உள்ளது என பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X