For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஞ்சை: காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:காவிரியில் தண்ணீர் அதிகம் வருவதால் உபரி நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டல் காவிரிக் கரையோர பகுதிகளில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 2 நாட்களாகதொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்தின் கடலோரமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இன்று காலை திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

திருச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் போல மழைநீர் ஓடிக் கொண்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய காவிரிப் பாசனப் பகுதிமாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.இதனால் கல்லணைக்கு கூடுதல் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதைத் தொடர்ந்துதஞ்சை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடக் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால்அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தேவையான முன்னெச்சரிக்கைநடவடிக்கைகளை எடுக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X