வீரப்பன் கதை: முத்துலட்சுமி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சந்தனக் கடத்தல் வீரப்பன் கதையை யாரும் தனது அனுமதி இல்லாமல் படமாக எடுக்கக் கூடாது என்றுஉத்தரவிடக் கோரி வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வீரப்பன் கதையை படமாக்கப் போவதாக கன்னட பட இயக்குநர் ரமேஷ் அறிவித்துள்ளார். இதேபோல பெருசுபடத்தை இயக்கிய இயக்குநரும் வீரப்பன் கதையை படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதற்கு முத்துலட்சமி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். தனது அனுமதி இல்லாமல் யாரும் வீரப்பன் கதையைபடமாக்கக் கூடாது என்று அவர் கூறியுள்ளார். ஆனால் முத்துலட்சுமியின் எதிர்ப்பைப் பொருட்படுத்தப்போவதில்லை என்று இருவரும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் முத்துலட்சுமி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து முத்துலட்சுமிகூறுகையில், என்னைப் பொருத்தவரையில், நல்ல பொருளாதார சூழ்நிலை ஏற்படும்போது, என் கணவரைப் பற்றிநானே படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

என்னுடைய அனுமதி இல்லாமல் எனது கணவரின் கதையை எப்படி ரமேஷ் உள்ளிட்டோர் படமாக எடுக்கமுடியும்? இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார் முத்துலட்சுமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+