மலேசியாவின் புதிய மன்னர் சுல்தான் அபிதின்
கோலாலம்பூர்:மலேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் மிஸான் ஜைனல் அபிதின் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவில் மன்னர் நடைமுறை இன்றும் உள்ளது. தற்போது மன்னராக சையத் சிராஜுதீன் புத்ராஜமாலுல்லைல் இருக்கிறார். இவர் ஓய்வு பெறவுள்ளதைத் தொடர்ந்து புதிய மன்னர் பெயரை அந்நாட்டுப்பிரதமர் அப்துல்லா அகமதுபதாவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பதாவி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய மன்னராக சுல்தான் மிஸான் ஜைனல் அபிதின்நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக டுவாங்கு அப்துல் ஹலீம் நியமிக்கப்படுகிறார். இருவரும் டிசம்பர்13ம் தேதிபொறுப்பேற்கிறார்கள். அன்று முதல் 5 ஆண்டுகளுக்கு இருவரும் பொறுப்பு வகிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் பிரபல சாந்தர்ஸ்ட் ராயல் மிலிட்டரி அகாடமியில் ராணுவப் பயிற்சி பெற்றவர் புதிய மன்னராகநியமிக்கப்பட்டுள்ள அபிதின். 44 வயதாகும் அவர் தற்போது எண்ணை வளம் மிக்க டெரங்கனு மாகாணத்தின்நிர்வாகப்பொறுப்பில் உள்ளார்.
மலேசியாவின் 13வது மன்னராக அபிதின் பொறுப்பேற்கவுள்ளார். கோலாலம்பூரில் உள்ள தேசியஅரண்மனையில்நடந்த சிறப்புக் கூட்டத்தில் அபிதின் புதிய மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மலேசிய வம்சாவழி மன்னர் பரம்பரையினர் கூடி அபிதினை புதிய மன்னராக தேர்வு செய்தனர். மன்னரேநாட்டின் உயரிய தலைவர் என்றாலும் கூட அவருக்கென்று பிரத்யேக, ஆட்சி அதிகாரம் எதுவும் கிடையாது.சம்பிரதாய தலைவராகவே அவர் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications