கன மழை தொடரும்: பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை:தமிழகத்தில் இன்றும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், மாநிலம் முழுவதும்பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தொடர்ந்து அங்கேயே நிலைகொண்டிருப்பதால் மாநிலம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 48 மணி நேரத்திற்குநீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரித்தது.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதால்,வெள்ள நிலைமையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முன்னேற்பாடுகளுடன்இருக்குமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கோவை, தஞ்சை, நாகை, திருச்சி, தேனி உள்ளிட்டமாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மோசமான வானிலை காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில், எந்தவிதமான சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில், மாநகராட்சி, மின்வாரியம்,காவல்துறை, தீயணைப்பு, பொதுப்பணித்துறை, மெட்ரோ வாட்டர் ஆகிய துறையினர் முன்னேற்பாட்டுடன்உள்ளனர்.
எண்ணூ
எண்ணூ
இதேபோல முக்கிய ஏரியான போரூர் ஏரியும் நிரம்பி வருகிறது. கடல் போலக் காட்சி அளிக்கும் போரூர் ஏரிஅருகே உள்ள குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஏரிகளை ஆக்கிரமித்து வீடு கட்டிக் குடியிருந்தவர்கள்தற்போது அவற்றை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு தற்காலிகமாக குடியேறியுள்ளனர்.
போரூர் அருகே உள்ள வானகரம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கைஎடுக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தப்பினர்.












Click it and Unblock the Notifications