அரசு மருத்துவமனையில் 17 குழந்தைகள் மரணம்
கொல்கத்தா:கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 17 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதால்அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் பி.சி.ராய் அரசினர் குழந்தைகள் மருத்துவமனையில்தான் இந்த சோகம் நடந்துள்ளது. ஆனால்இதுபோன்ற சம்பவங்கள் வழக்கமானதுதான் என்று படு அலட்சியமாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளதுதான் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு ஏராளமான குழந்தைகள் தொற்று நோய் சம்பந்தமாக அனுமதிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 குழந்தைகள்வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமை 9 குழந்தைகளும் இறந்தன. பிறந்து 3 மணி நேரமே ஆனது முதல் ஒரு மாதம்வரையிலான குழந்தைகள்தான் இப்படிப் பரிதாபமாக இறந்துள்ளன.
இதுகுறித்து மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எம்.கே.சாட்டர்ஜி கூறுகையில், இந்தக் குழந்தைகள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டன. இது தற்செயலானதுதான்.ஏற்கனவே இந்த குழந்தைகளுக்கு நோய்த் தொற்று இருந்தது.
இதுபோல குழந்தைகள் மொத்தமாக இறப்பது அசாதாரணமானது அல்ல. இவற்றில் இரண்டு குழந்தைகள்அறுவைச் சிகிச்சையின்போது இறந்தன. அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன்பே, வெற்றி பெறுவதற்கானவாய்ப்புகள் மிகவும் குறைவு என்று உறவினர்களிடம் கூறி விட்டுத்தான் அறுவைச் சிகிச்சையைமேற்கொண்டோம் என்றார் சாட்டர்ஜி.
அடுத்தடுத்து 17 குழந்தைகள் அரசு மருத்துவமனையில் இறந்திருப்பது கொல்கத்தாவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.