For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்க தூதரகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகஇந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சதாம் உசேனுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு பரவலாக எதிர்ப்பு காணப்படுகிறது. இதனால் இந்தியாவில்உள்ள அமெரிக்க தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள தூதரக அலுவலகங்களுக்கு பலத்த பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறுகையில், ஆயுதம் தாங்கியபடையினரும், ரோந்து வாகனங்களும் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்க துணைத் தூதரகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் வீடுகளுக்கும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் உள்ள அமெரிக்கப் பள்ளிகள், அமெரிக்க நிறுவனங்களுக்கும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார் சரண்.

இதேபோல, ஷியா பிரிவு முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்திலும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X