கன மழையால் ஸ்தம்பித்தது தமிழகம்
சென்னை:தமிழகம் முழுவதும் இன்று பெய்து வரும் கன மழையால் மாநிலத்தின்பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை ஸ்தம்பித்தது.
தமிழகத்திற்கும், ஆந்திராவுக்கும் இடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால்தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்துவந்தது.
மதுரையிலும் சுற்றுப் பகுதிகளிலும் நேற்றிரவு கன மழை பெய்தது. நேற்றிரவு மட்டும் 61.5 மி.மீ. மழைபதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டிலேயே மதுரையில் பெய்த அதிகபட்ச மழையாகும்.
அதே போல இன்று காலை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழைகொட்டித் தீர்த்தது. குறிப்பாக சென்னை, கோவை, சேலம், திருநெல்வேலி,ராமநாதபுரம், கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் பெரும்பாலானபகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தென் தமிழகத்தில்தான் அதிக அளவிலான மழை பெய்துள்ளது. புதுச்சேரியிலும்பரவலாக பலத்த மழை பெய்தது. இந்த மழை அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கும்என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் பெய்த கன மழையால் தலைநகரம், தண்ணீர் நகரமாக மாறியுள்ளது.நகரின் பெரும்பாலான பகுதிகளிலும் தண்ணீர் ஆறு போல ஓடி வருகிறது. தாழ்வானபகுதிகளில் வெள்ளம் என மழை நீர் தேங்கிக் கிடப்பதால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை, திருப்புவனம், ஸ்ரீவில்லிபுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், திருச்செந்தூர்சிவகாசி, திருப்பூர், பொள்ளாச்சி, பேரையூர், காங்கேயம், நாகர்கோவில், மதுரை,சங்கரன்கோவில், அம்பாசமத்திரம், ராஜபாளையம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாகமழை பெய்தது.
வைகையில் வெள்ளம்:
மதுரை சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் இப் பகுதிகளின் குளங்கள், சிற்றாறுகள், கண்மாய்கள் நிரம்பி வழிகின்றன. இந்தமழையால் வைகை அணைக்கும், முல்லைப் பெரியாறு அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 68 அடியாக உயர்ந்துவிட்டது. இந்த அணையின் அதிகபட்ச நீர் மட்டம் 71 அடி தான். இப்போது அணைக்கு அதிக அளவில் நீர்வந்து கொண்டிருப்பதால் வினாடிக்கு 1,800 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிப்போருக்கு முதல் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மழையும் நீர் வரத்தும் அதிகமானால் அணை முழுவதுமாக திறந்துவிடப்படும்.
இதனால் வைகை கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பு இடங்களுக்குச் சென்றுவிடுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதே போல முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.20 அடியாக உள்ளது. இந்த அணையில் 136 அடிக்கு மேல் நீரைத் தேக்க கேரள அரசுமறுத்து வருகிறது. இதனால் இந்த நீரும் திறந்துவிடப்பட்டால் பெரியாறு ஆற்றின் கரையோர பகுதிகளிலும் வெள்ள அபாயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications