துபாய்-மனைவியை கொன்று இந்தியர் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

துபாய்:துபாயில் கள்ளக் காதலில் ஈடுபட்ட மனைவியையும், இரண்டு வயது மகளையும் படுகொலை செய்தமும்பையைச் சேர்ந்த இளைஞர், தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பையைச் சேர்ந்தவர் குமார் ஆச்சார்யா வாசுதேவன். 33 வயதாகும் இவர் துபாயில் பணியாற்றி வந்தார்.இவரது மனைவி லின்னெட் அல்மெய்தா. இருவரும் நீண்ட காலம் காதலித்துப் பின்னர் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் மகள் உள்ளார்.

மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் திடீர் புயலாக கள்ளக் காதல் நுழைந்தது. குமாரின்மனைவிக்கும், இன்னொருவருக்கும் இடையே கள்ளக் காதல் உருவானது. இதை அறிந்த குமார் மிகுந்த அதிர்ச்சிஅடைந்தார். தான் தீவிரமாக நேசித்த மனைவி, இன்னொருவர் மீது பிரியம் காட்டியது அவருக்கு பெரும்அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து லின்னெட்டை அவர் கயிற்றால் கழுத்தை நெகித்துக் கொலை செய்தார். பின்னர் தனது மகளைதலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்தார். இதைத் தொடர்ந்து தான் வசித்து வந்த 10வதுமாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதி வைத்த 3 கடிதங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில், நான்எனது மனைவியை மிகவும் நேசித்தேன். ஆனால் அவரோ இன்னொருவரிடம் மனதைப் பறிகொடுத்தார். இதைஎன்னால் ஏற்க முடியவில்லை.

எனவேதான் எனது மனைவியைக் கொலை செய்தேன். நானும் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். இதன் மூலம்மரணத்திற்குப் பிறகும் எனது மனைவியுடன் அன்போடு இருக்கப் போகிறேன் என்று எழுதி வைத்துள்ளார்குமார்.

குமாரின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோரும் அதே பகுதியில்தான் வசித்து வருகின்றனர். குமார், அவரதுமனைவி, குழந்தை ஆகியோரின் உடல்கள் மும்பைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+