தமிழக சட்டசபை டிச. 4ல் கூடுகிறது
சென்னை:தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்குகிறது.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் தமிழக சட்டசபையின் முதலாவதுபட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் மாதம் முடிந்து ஒத்திவைக்கப்பட்டது.இதையடுத்து தற்போது குளிர் காலக் கூட்டத் தொடர் கூடும் தேதிஅறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி சட்டசபைக் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சட்டசபை செயலாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகஆளுனர் எஸ்.எஸ்.பர்னாலா, சட்டசபைக் கூட்டத்தை டிசம்பர் மாதம் 4ம் தேதிகூட்டுமாறு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத் தொடர் மிகவும் பரபரப்பானதாக இருக்கக் கூடும் எனத்தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தலில் நடந்த பெரும் வன்முறைகள் தொடர்பாக அதிமுகமற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சியான பாமக, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும்பிரச்சனை கிளப்பவுள்ளன.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ்ரெய்டுகள், சென்னை காசி மேடு மீனவர்கள் காணாமல் போனது ஆகியவிவகாரத்தையும் அதிமுக கிளப்பவுள்ளது.
இதனால், குளிர்காலக் கூட்டத் தொடராக இருந்தாலும் சூடு ரொம்ப ஜாஸ்தியாகவேஇருக்கப் போகிறது.












Click it and Unblock the Notifications