ஜெகஜால ஜெயலட்சுமிக்கு ஒரு வழக்கில் ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:முன்னாள் டி.எஸ்.பி. ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டஜெயலட்சுமிக்கு அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. இருப்பினும் மற்ற வழக்குகளில் அவருக்கு ஜாமீன்கிடைக்காததால் அவரால் சிறையிலிருந்து விடுதலை ஆக முடியாது.

திண்டுக்கல் டிஎஸ்பியாக ராஜசேகர் இருந்தபோது அவரை ஜெயலட்சுமி திருமணம் செய்து கொண்டார். இதைஅறிந்த ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் ராஜசேகருக்கும், ஜெயலட்சுமிக்கும் வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருவரும் சிறையில்அடைக்கப்பட்டனர். ஜெயலட்சுமி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.இந்த வழக்கில் ராஜசேகர் ஏற்கனவே ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

இதற்கிடையே ஜெயலட்சுமி தனக்கு வழங்கிய தண்டனைக்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி செல்வம், ஜெயலட்சுமிக்குவழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார்.

இருப்பினும் நகை மோசடி வழக்கில் ஜெயலட்சுமிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. எனவே அவரால்விடுதலையாகி வெளியே வர முடியாத நிலை உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+