தமிழகத்தில் சாம்சங் ரூ.450 கோடி முதலீடு
சென்னை:சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 450 கோடி முதலீட்டில் இரு உற்பத்திப்பிரிவுகளை சாம்சங் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தமிழகஅரசுக்கும், சாம்சங் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்றுகையெழுத்தாகியது.
அதன்படி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 50 ஏக்கர்பரப்பளவில் ரூ. 284 கோடி முதலீட்டில் கலர் டிவி பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள்தயாரிப்பு பிரிவை சாம்சங் நிறுவனம் நிறுவவுள்ளது.
இதேபோல ரூ. 166 கோடி முதலீட்டில் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், பிரிண்டர்கள்ஆகியவற்றை தயாரிக்கும் உற்பத்திப் பிரிவு அமைக்கப்படும். இதன் மூலம் 4000பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த உடன்பாடு கையெழுத்தானபோது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைஅமைச்சர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் திரிபாதி உள்ளிட்டோரும் உடன்இருந்தனர்.












Click it and Unblock the Notifications