வெள்ள நிவாரண நிதி: விஜயகாந்த் கோரிக்கை
சென்னை:தமிழகம் முழுவதும், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிவாரண நிதி உள்ளிட்டஉதவிகளைச் செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தங்கும் வசதி இல்லாமல், வேலைக்குச் செல்ல முடியாமல், வருமானத்துக்கும் வழியின்றி அவர்கள் தவிக்கின்றனர்.அவர்களுக்கு உதவ தமிழக அரசு முன்வர வேண்டும்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுபுகார்கள் வருகின்றன. அப்படிப்பட்ட புகார்களுக்கு இடம் தராமல், உரிய உணவுப் பொருட்களை வழங்கவும்,தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளும் இந்த மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள்மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் அவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதுதவிர சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால் போக்குவரத்தும் பலஇடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. அவற்றையும் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரியுள்ளார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications