தலித் பஞ். தலைவர்களுக்கு நாளை பாராட்டு
சென்னை:பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களின்தலைவர்கள் மற்றும் ஊர் மக்களுக்கு சென்னையில் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் பாராட்டு விழாநடைபெறவுள்ளது.
மேற்கண்ட நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும் நீண்ட காலமாக தலைவர் தேர்வு செய்யப்பட இயலாத சூழ்நிலைநிலவியது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது இந்த நான்கு பஞ்சாயத்துக்களுக்கும்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து தேர்தலை சுமூகமாக நடத்த உதவிய ஊர் மக்களைப் பாராட்டும் வகையிலும், தலித் பஞ்சாயத்துத்தலைவர்களை கெளரவிக்கும் வகையிலும் சென்னையில் நாளை பாராட்டு விழாவுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு சமத்துவ பெருவிழா என்று முதல்வர் கருணாநிதியின்விருப்பப்படி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில், நான்கு தலித் பஞ்சாயத்துத் தலைவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நான்கு ஊர் மக்கள்,மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக இன்று இரவு மதுரையிலிருந்து சிறப்பு ரயிலில் இவர்கள்சென்னைக்குக் கிளம்புகிறார்கள். இரவு 11 மணிக்கு இந்த ரயில் மதுரையிலிருந்து கிளம்புகிறது.
நாளை அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும் இவர்களுக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர்மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் அனைவரும் ஓய்வெடுக்கின்றனர். மாலை 5 மணிக்கு கலைவாணர் அரங்கில் பாராட்டு விழாநடைபெறுகிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான டாக்டர்ராமதாஸ், வரதராஜன், தா. பாண்டியன், திருமாவளவன், காதர் மொஹைதீன், பூவை. ஜெகன் மூர்த்திஉள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசுகின்றனர்.
தி.க.தலைவர் கி.வீரமணி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவார்கள். மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் உதயச்சந்திரன் நன்றி நவில்கிறார்.












Click it and Unblock the Notifications