ஒட்டப்பிடாரம்: குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் பலி
ஒட்டப்பிடாரம்:தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் குளத்திற்கு குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியானார்கள்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. 13 வயதாகும்முத்துலட்சுமி 8வது வகுப்பு படித்து வந்தார். அவருடன் படிக்கும் சண்முகப் பிரியா, கனிச் செல்வி, மீனா, கவிதாஆகியோர் அங்குள்ள குளம் ஒன்றில் துணி துவைத்து குளித்து விட்டு வரச் சென்றனர்.
மழை காரணமாக குளம் நிரம்பியிருந்தது. ஆழமான அந்தக் குளத்தில் இறங்கி மாணவிகள் குளித்துள்ளனர்.அப்போது ஆழமான பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் வெளியேற முடியாமல் தவித்தனர்.
நீச்சலும் தெரியாது என்பதால் 5 மாணவிகளும் உதவி கோரி குரல் எழுப்பினர். இந்த நிலையில் கனிச்செல்வி,சண்கப் பிரியா, முத்துலட்சுமி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற இருவரும்தப்பித்து கரை சேர்ந்தனர்.
இறந்தவர்களில் கனிச் செல்வியின் குடும்பத்தின் கதைதான் சோகமானது. அவரது அண்ணன் சில ஆண்டுகளுக்குமுன்பு சாலை விபத்தில் இறந்தார். இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கனிச் செல்வியின் தாயார் தீக்குளித்துத்தற்கொலை செய்து கொண்டார். இப்போது கனிச் செல்வி தண்ணீரீல் மூழ்கி இறந்து விட்டார்.