பிரியங்காவின் குழந்தைகளுக்கு தீவிரவாத மிரட்டல்
டெல்லி:நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவைவிடுதலை செய்யக் கோரி முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் பேரக் குழந்தைகளை கடத்ததீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல்குரு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சார்பில் தாக்கல்செய்யப்பட்டுள்ள கருணை மனு குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளதால்தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அப்சல் குருவைத் தூக்கிலிட்டால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரத்த ஆறு ஓடும் எனபல்வேறு தீவிரவாத அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. மேலும், பல்வேறுஅமைப்பினரும் அப்சல் குருவைத் தூக்கிலிடக் கூடாது என கோரி வருகின்றனர்.
ஆனால் பாஜக உள்ளிட்ட சில கட்சிகள் அப்சலை உடனடியாக தூக்கிலிட வேண்டும்என வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் அப்சல் குருவை விடுதலை செய்யக்கோரி வாஜ்பாய், மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்ட முக்கியப்பிரமுகர்களின் பேரக் குழந்தைகளை கடத்திச் செல்ல தீவிரவாதிகள்திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது கடத்திச் சென்று பிணையக் கைதிகளாக வைக்கதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை, மத்திய அரசைஎச்சரித்துள்ளது. இதை மத்திய அரசு சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தலைமையில் அவசரஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மன்மோகன் சிங், சோனியா ஆகியோரின் பேரக்குழந்தைகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க அப்போது முடிவு செய்யப்பட்டது.சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு 7 வயதில் ஒரு மகன், 5 வயதில் ஒருமகள் உள்ளனர்.
தற்போது தங்களது பாட்டி, தாயாருக்கு வழங்கப்படுவதைப் போல இவர்களுக்கும்இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளது.இனிமேல் இவர்கள் எங்கு சென்றாலும் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்படும்.
இதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள், மருமகன், பேரக் குழந்தைகள்,வாஜ்பாயின் பேரக் குழந்தைகள், எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியின் மகன், மகள்ஆகியோருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications