For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 மீனவர்கள் மாயம்: அதிமுக போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று இன்னும் கரைக்குத் திரும்பாத சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஐந்துமீனவர்களை மீட்கும் முயற்சியில் திமுக அரசு மெத்தனம் காட்டி வருவதாக கூறியும் அதைக் கண்டித்து அதிமுகசார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 22ம் தேதி காசிமேட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் 5பேரைத் தவிர மற்றவர்கள் கரைக்குத் திரும்பி விட்டனர். காணாமல் போன ஐந்து பேரின் கதி குறித்துதெரியவில்லை.

அவர்களில் ஒருவரின் உடல் சமீபத்தில் கரை ஒதுங்கியது. மற்ற நான்கு மீனவர்கள் கதி குறித்து இன்னும் எந்தத்தகவலும் இல்லை.

இந்த நிலையில், மீனவர்கள் விவகாரத்தில், திமுக அரசு அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் குற்றம் சாட்டினார். மேலும், அதிமுக மீனவர் அணி சார்பில்,போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே அதிமுக மீனவர் அணிச் செயலாளர்ஜெயக்குமார் தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X