For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. மனு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குமற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவற்றை தனித் தனியாக விசாரிக்க கோரி திமுக பொதுச் செயலாளர்அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்திற்கு உச்சநீதிமன்றம்தள்ளி வைத்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் மீது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்குமற்றும் லண்டனில் ஹோட்டல் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ளது.

இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுத்த கோரிக்கையை ஏற்றதனி நீதிமன்றம் இரு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிட்டது. ஆனால் இதற்கு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றஉச்சநீதிமன்றம் பெங்களூர் தனி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த நிலையில் அன்பழகனின் மனு நேற்று நீதிபதிகள் பி.என்.அகர்வால், நவ்லோகர் ஆகியோர் முன்னிலையில்மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பான விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X