சசி அண்ணன் சுகவீனம்: ஜெ சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனம், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் காய்ச்சல், வாந்தி காரணமாக மைலாப்பூரில் உள்ள இசபெல்லாமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்து ஜெயலலிதா சந்தித்து நலம் விசாரித்தார்.அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.அப்போது முன்னாள் அமைச்சர்ஓ.பன்னீர்செல்வமும் உடன் இருந்தார்.

அதே போல உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி கிழக்குமாவட்ட அதிமுக செயலாளர் செந்தூர் பாண்டியனையும் மருத்துவமனையில் சந்தித்து ஜெயலலிதா உடல் நலம் விசாரித்தார்.

இந் நிலையில் சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனமும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கொட்டிவாக்கத்தில் உள்ளசசிகலாவின் உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரையும் ஜெயலலிதா சந்தித்து நலம்விசாரித்தார்.

ஜெயக்குமாரை சந்தித்த வைகோ:

அதே போல ஜெயக்குமாரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

ஜெ-வைகோ சந்திப்பு:

இந் நிலையில் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டத்தின் இல்லத்தில் வைகோ ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார்.உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்குப் பின் இருவருக்கும் இடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+