For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நுழைவு தேர்வு ரத்தால் திறமைக்கு வாய்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

கோவை:திறமை உள்ள மாணவர்களுக் வாய்ப்பு அளிக்கவே பிஇ, எம்பிபிஎஸ் உள்ளிட்ட தொழிற் படிப்புகளுக்கானநுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டாத அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி கூறியுள்ளார்.

கோவையில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில்அவர் பேசுகையில்,

மிக வேகமாக வளர்ந்து வரும் தகவல்தொழில் நுட்பத் துறையில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கிவருகின்றனர். டாடா, இன்போசிஸ், விப்ரோ ஆகிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், கோவையில்தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கவுள்ளது. இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகிடைக்கும்.

பள்ளிக் படிப்பை முடித்து நல்ல மதிப்பெண் பெற்றாலும், தொழிற் படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதவேண்டிய நிலை இருந்தது. ஏற்கனவே படித்த பாடங்களையே திரும்பவும் நுழைவுத் தேர்வுக்காக படிக்கும் நிலைமாணவர்கள் இருந்தது.

தற்போது நுழைவுத் தேர்வை ரத்து செய்யுமாறு வல்லுனர் குழு அரசிடன் பரிந்துரை செய்துள்ளது. அதன் படிஅரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்துள்ளது.

திறமை உள்ள மாணவர்களைக் கண்டறிந்து வாய்ப்பு அளிக்கும் வகையில் தான் நுழைவுத் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X