ஊசி போட்ட கம்பவுண்டர்; நோயாளி சாவு
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு கம்பவுண்டர்ஊசி போட்டார். சிறிது நேரத்தில் அந்த நோயாளி பரிதாபமாக இறந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவரதுமகன் சங்குபாணி. 45 வயதாகும் சங்குபாணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.இதையடுத்து அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
புறநோயாளிகள் பிரிவில் இருந்த டாக்டர், சங்குபாணிக்கு 3 மாத்திரைகளை கொடுத்துசாப்பிடுமாறு கூறியுள்ளார். ஆனால் அதில் சங்குபாணிக்குத் திருப்தி ஏற்படவில்லை.
அப்போது அங்கு இருந்த கம்பவுண்டர் சிவா என்பவர் நான் ஊசி போடுகிறேன்,சரியாகி விடும் என்று கூறி ஊசி போட்டுள்ளார். ஊசி போடப்பட்ட சிலநிமிடங்களிலேயே சங்குபாணி மயக்கமடைந்து கீழே விழுந்து இறந்தார்.
இதையடுத்து கம்பவுண்டர் சிவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இறந்த சங்குபாணியின் உடலை மருத்துவமனை வளாகத்தில் வைத்து அவரதுஉறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
மருத்துவரின் அலட்சியத்தாலும், கம்பவுண்டர் போட்ட தவறான ஊசியாலும்தான்சங்குபாணி இறந்தார். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் உடலை எடுத்துச் செல்வோம் என்று அவர்கள் கூறினர்.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளும்காஞ்சிபுரம் பாமக எம்.எல்.ஏ. சக்தி கமலாம்பாள் உள்ளிட்டோரும் விரைந்து வந்துஉறவினர்களை சமாதானப்படுத்தினர்.
இது தொடர்பாக கம்பவுண்டர் சிவா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications