ஜப்பான்: சுனாமி அபாயம் நீங்கியது

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ:ஜப்பான் கடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் சிறிய அளவிலான சுனாமிஅலைகள் தாக்கின. இனிமேல் சுனாமி அலைகள் வரக் கூடிய அபாயம் இல்லை என்று ஜப்பான் அரசுஅறிவித்துள்ளது.

ஜப்பான் கடலில், வடக்கே உள்ள குரில் தீவுக் கூட்டம் அருகே கடலுக்கடியில் நேற்று மாலை சக்தி வாய்ந்தநிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அளவு 8.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. சிறு சிறு தீவுகளால் ஆன தீவுக் கூட்டம்இது.

இதையடுத்து சுனாமி அலைகள் தாக்கக் கூடும் என பசிபிக் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்தது.வடக்கு ஜப்பான், ரஷ்யா, பிலிப்பைன்ஸ், தைவான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கக் கூடும்என எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து ஜப்பானின் ஹோக்கைடோ, ஹோன்சு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவசரம்அவசரமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானமக்கள் வெளியேற்றப்பட்டதால் அந்த இரு தீவுகளும் வெறிச்சோடின.

இதேபோல ரஷ்யாவின் ஷகாலின், குரில் தீவுப் பகுதிகள், கிழக்கு கடலோர பகுதிகளில் வசித்து வந்தவர்களும்பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் ஹோகைடோ தீவில் உள்ள நெமுரோ துறைமுகப் பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது.ஆனால் எதிர்பார்த்தபடி இது பெரிய அலையாக இல்லை. 45 செமீ உயரமே கொண்ட சிறிய சுனாமியாகஇருந்தது. இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

2வது அலை கோஷிரோ துறைமுக நகரில் தாக்கியது. இது முதல் அலையை விட பாதி அளவு உயரமே இருந்தது.அதன் பிறகு சுனாமி அலைகள் வரவில்லை.

இதைத் தொடர்ந்து நள்ளிரவுக்கு மேல் சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் அரசு வாபஸ் பெற்றது. இதற்கு மேல்பெரிய அளவிலான சுனாமி அலைகளுக்கு வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்கடலோரப் பகுதி மக்கள் மிகவும் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பூகம்பத்தால் இதுவரை பெரிய அளவிலான சேதமோ, உயிரிழப்போ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

பிலிப்பைன்சில் சுனாமி பீதி:

இதற்கிடையில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பீதி பிலிப்பைன்சிஸ் மக்களிடையேயும் பீதியை கிளப்பியது. அந்நாட்டு அரசு சுனாமி அலை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளபோதிலும் கடலோரப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

ஜப்பானில் வடக்கே உள்ள குரில் தீவுக் கூட்டம் அருகே நேற்று மாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்துபிலிப்பைன்ஸ் மக்களுக்கு அந் நாட்டு அரசு வானெலி மூலமாகவும், செல்போன் மூலமாகவும் சுனாமி,நிலநடுக்கும் குறித்த அச்சம் கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்படுள்ளது. இருந்தாலும் இன்னும்அவர்களிடேயே சுனாமி பீதி நீங்கவில்லை. தொடர்ந்து இடம் பெயர்ந்து கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+