தமிழகத்தில் ரூ.2500 கோடியில் டாடா ஆலை
சென்னை:திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.2500 கோடி முதலீட்டில், பெயின்ட் தயாரிக்க உதவும் மூலப்பொருளான டைட்டானியம் டை-ஆக்ஸைடு தயாரிக்கும் தொழிற்சாலையை டாடா ஸ்டீல் நிறுவனம்அமைக்கவுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பெருமளவில் கிடைக்கும் இல்மனைட் என்ற தாதுப் பொறுளைதோண்டியெடுத்து அதை சுத்தம் செய்து அதிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்க டாடா ஸ்டீல்திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு 5 லட்சம் டன் இல்மனைட்டை தோண்டியெடுக்க பூர்வாங்கத் திட்டம் வகுக்கப்பட்டது.இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் டாடா ஸ்டீலுக்கும் இடையே ஏற்கெனவே கையெழுத்தாகிஉள்ளது.
இத்திட்டம் குறித்து டாடா ஸ்டீல் நிறுவனம் விரிவான ஆய்வை மேற்கொண்டது. இல்மனைட் மூலப்பொருளில்இருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு லாபகரமாக தயாரிக்க வேண்டுமானால், தொழிற்சாலைக்கு வேண்டியதண்ணீர் அப்பகுதியில் இல்லை.
எனவே கடல் நீரில் இருந்து சுத்தமான தண்ணீர் தயாரிக்க தனியாக தொழிற்சாலை அமைத்து அதைப்பயன்படுத்தலாம் என்று டாடாவின் ஆய்வில் தெரிய வந்தது.அதன் அடிப்படையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இல்மனைட் தாதுப்பொருளைத்தோண்டியெடுக்கவும் அதிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கவும் டாடா நிறுவனத்துக்கு உரிமம்வழங்கப்பட்டுள்ளது.
சுரங்கப் பணிகளிலும், பின்னர் சுத்திகரிப்பு பணிகளிலும் டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு உதவ எம்என்.தஸ்தூர்வோ,ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டி.இசட்.எம்.ஐ ஆகிய நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
2008ம் ஆண்டில் டைட்டானியம் டை ஆக்ஸைடு உற்பத்தியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்த திட்டச்செலவு ரூ.2500 கோடி ஆகும்.இந்தியாவில் ஒரு டன் டைட்டானியம் டை ஆக்ஸைடு ரூ.1 லட்சம் முதல் 1.2 லட்சம் வரை விற்கப்படுகிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications