தமிழகத்தில் 34% கூடுதல் மழை
சென்னை:தமிழகத்தில் நடப்பு வட கிழக்குப் பருவ மழை காலத்தில்வழக்கத்தை விட கூடுதலாக 34 சதவீத மழை பெய்துள்ளதாகவானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள வானிலை ஆராய்ச்சி நிலையத்தின்இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் இன்று செய்தியாளர்களிடம்பேசினார்.
அப்போது, வழக்கமாக வட கிழக்குப் பருவ மழையின்போது,அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒட்டுமொத்ததமிழகத்தில் 28 சதவீத மழை பெய்யும்.
ஆனால் இந்த ஆண்டு, நவம்பர் மாதத்திற்குள்ளாகவே 62சதவீதம் மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 34 சதவீதம்கூடுதலாகும்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளது.இருப்பினும் கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகியமாவட்டங்களில் வழக்கத்தை விட குறைவாகவே மழைபெய்துள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தகாற்றழுத்த மண்டலம் அதே இடத்தில் தொடர்ந்து நிலைகொண்டுள்ளது. எனவே 24 மணி நேரத்திற்கு பரவலாக மழைபெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 14செமீ மழையும், பரங்கிப்பேட்டையில் 12 செமீ மழையும்பதிவாகியுள்ளது என்றார் ரமணன்.












Click it and Unblock the Notifications