கேரளத்துக்கு அடிபணியும் தமிழகம்: பாஜக
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு தமிழக அரசே துரோகம் செய்கிறது என்று பாஜகமாநில துணைத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தைஅதிகரிக்க உச்சநீதிமன்றமே அதிகாரம் கொடுத்த பிறகும் தமிழக அரசு நீரைத் தேக்கி வைக்காமல் திறந்துவிட்டுள்ளது வேதனை தருகிறது, வியப்பாக உள்ளது.
இந்த செயலுக்கு தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மழை பெய்யும் காலத்தில் நீரைத் தேக்கிவைக்காமல் இருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கும், தமிழகத்திற்கும் அரசே துரோகம் செய்வதாகத்தான்நினைக்க வேண்டியுள்ளது.
அணை நமது பராமரிப்பில் உள்ளது. ஆனால் மதகுகளை மூட முடியாமல் கேரள போலீஸார் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டுள்ளனர். நமது அரசு கேரளாவுக்கு அடிபணிந்து போகும் வகையில் நடந்து கொள்கிறது.
இலங்கை அதிபர் இந்தியாவுக்கு வரும்போது தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வை அவருக்கு எடுத்துக் கூறவேண்டும். இனப் படுகொலை இனியும் தொடரக் கூடாது என அவரை எச்சரிக்க வேண்டும் என்றார்ராதாகிருஷ்ணன்.