For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மன்மோகன் -ஆப்கன் அதிபர் நிாளை சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாய் நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப்பேசுகிறார்.

நான்கு நாள் பயணமாக கர்ஸாய் இந்தியா வந்துள்ளார். புதன்கிழமை இந்தியா வந்த அவர் சிம்லாவுக்குதனிப்பட்ட முறையிலான பயணத்தை மேற்கொண்டார்.

நாளை அவர் இந்திய-ஆப்கன் 2வது பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டை அவர் தொடங்கிவைக்கிறார். இந்த மாநாட்டில் மன்மோகன் சிங்கும் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டைத் தொடர்ந்துமன்மோகன் சிங்கை சந்தித்து இரு நாட்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்கிறார் கர்ஸாய்.

இதேபோல குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டதலைவர்களையும்கர்ஸாய் சந்திக்கிறார்.

19ம் தேதி தேசிய விவசாய அறிவியல் அகாடமி சார்பில் நடைபெறவுள்ள ஆய்வு மாநாட்டில் சிறப்பு

விருந்தினராககர்ஸாய் பங்கேற்கிறார். அதே நாளில் குடியரசுத் தலைவர் மாளிகையில், நடக்கும் நிகழ்ச்சியில் கர்ஸாய்க்கு,அமைதி, முன்னேற்றம் தொடர்பான இந்திரா காந்தி விருதை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வழங்குகிறார்.

கர்ஸாயுடன் 7 அமைச்சர்களும், அமைச்சர் மட்டத்திலான அதிகாரிகளும் அடங்கிய உயர் மட்டக் குழுவும் உடன்வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X