இந்திய அணு ஒப்பந்தம்-யுஎஸ் செனட் நிறைவேற்றம்
வாஷிங்டன்:இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையிலான அணு சக்தி ஒப்பந்தம் அமெரிக்க செனட் சபையில் அமோகவாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்திய அணு மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும்இடையே சிவில் அணு சக்தி ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் கையெழுத்தானது. இதில் அமெரிக்க அதிபர்புஷ்ஷும், பிரதமர் மன்மோகன் சிங்கும் கையெழுத்திட்டனர்.
இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு இந்தஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. அதில்ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று அதிகாரத்தை கைப்பற்றியது.
இதனால் செனட் சபையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில்,ஜனநாயகக் கட்சித் தலைவர்களை சந்தித்த புஷ், ஒப்பந்தம் நிறைவேற ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சூழ்நிலையில் நேற்று செனட் சபையில் ஒப்பந்தம் விவாதத்திற்கு வைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 மணிநேரம் ஒப்பந்தம் மீது விவாதம் நடந்தது. இதில் மொத்தம் 18 திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவற்றில் 2மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவை நிராகரிக்கப்பட்டன.
விவாதத்தின் இறுதியில் ஒப்பந்தம் மீது வாக்கெடுப்பு நடந்தது. அதில் 85 வாக்குகள் ஒப்பந்தத்தை ஆதரித்தும், 12பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இதனால் அணு சக்தி ஒப்பந்தம் மிகப் பெரிய வாக்குகளுடன் அமோகமாகநிறைவேறியது.
செனட் சபையில் ஒப்பந்தத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதால் இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம்நடைமுறைக்கு வந்துள்ளது. செனட் சபையின் முடிவை அதிபர் புஷ் வரவேற்றுள்ளார். இரு நாடுகளுக்கும்இடையிலான உறவில் இது புதிய அத்தியாயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் செனட் சபையின்முடிவை வரவேற்றுள்ளது.