3 குழந்தைகளின் தாய் கத்திமுனையில் கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:3 குழந்தைகளுக்குத் தாயான கூலித் தொழிலாளியின் மனைவியை கற்பழித்ததாக அவரது வீட்டு உரிமையாளர்மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை சேத்துப்பட்டு மங்களாபுரம் மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவரது வீட்டில்வாடகைக்கு இருந்து வருபவர் தங்கமணி. கூலித் தொழிலாளியான இவரது மனைவி பெயர் லட்சுமி.இவர்களுக்கு இந்துமதி, அரவிந்த், அசோக்குமார் என 3 குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று தங்கமணி வேலைக்குப் போய் விட்டார். குழந்தைகளும் பள்ளிக்குப் போய் விட்டனர். லட்சுமிமட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அந்தோணி ராஜின் மகன் கார்த்திக் அங்கு வந்தார்.

லட்சுமியைக் கட்டாயப்படுத்தி தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். அவர் மறுக்கவே வாயில் துணியைஅடைத்து பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அவர் கத்திக் கூச்சல் போடவே, கத்தியை எடுத்துக் காட்டிமிரட்டி கத்தி முனையில் கற்பழித்து விட்டு தப்பி விட்டார்.

இதுதொடர்பாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்துகார்த்திக்கை கைது செய்தனர். கார்த்திக் மீது ஏற்கனவே காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+