கோவையில் சேரன் எக்ஸ்பிரசுக்கு குண்டு மிரட்டல்
கோவை:கோவை-சென்னை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ள வந்ததகவலால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் ரயில்வே நிலைய ஸ்டேசன் மாஸ்டரை நேற்று இரவு தொடர்பு கொண்ட பேசியஒரு நபர், கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரசில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.
இதையடுத்து கோவை, சென்னை தென்னிந்திய ரயில்வே உயரதிகாரிகளுக்கும்போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு குழுவினருடன் கோவைரயில் நிலையத்தில் கிளம்பத் தயாராக நின்றிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின்அனைத்துப் பெட்டிகளிலும் என்ஜிலும் தீவிர சோதனை நடத்தினர்.
பயணிகளின் உடைமைளும் சோதனையிடப்பட்டனர். ஆனால், குண்டு ஏதும்சிக்கவில்லை.
இதனால் மிகத் தாமதமாக இரவு 10.10 மணிக்குக்குத் தான் சேரன் எக்ஸ்பிரஸ் ரயில்சென்னை புறப்பட்டுச் சென்றது. ரயிலில் ரயில்வே படை போலீசார் அதிகஎண்ணிக்கையில் சென்றனர்.
சபரிமலையில் குண்டு பீதி:
இந் நிலையில் சபரிமலையில் குண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டதால்பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சபரிமலையில் மண்டல உற்சவத்திற்காக நேற்று அதிகாலை தான் நடைதிறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதி என்பதால் அதிகமான பக்தர்கள் குவுந்தனர்.
இந் நிலையில் பம்பை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குண்டு வெடித்தது போல பயங்கரசத்தம் கேட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது தெரியவந்த விவரம்:
பம்பை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தடுப்பு சுவர்களில் கறுப்பு-வெள்ளை பெயின்ட்அடிக்கும் பணி நடக்கிறது. பெயின்டுடன் பெவிக்காலை கலந்து ஒரு டப்பாவில்வைத்துள்ளனர்.
அந்த டப்பாவை துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளுடன் சேர்த்து தீயிட்டுகொளுத்தியபோது டப்பா பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது என்று தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications