சேலம் அருகே மாணவி கற்பழித்து கொலை பள்ளிக்கு தீ வைப்பு, சூறையாடல்-சாலை மறியல்
சேலம்:பள்ளியில் மாணவி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதையடுத்து பொது மக்கள்அந்தப் பள்ளியை சூறையாடினர்.
சேலம் அருகே ஓமலூரில் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூபடித்து வந்த பெண்ணாகரத்தை சேர்ந்த சண்முகம்-வெண்ணிலா தம்பதியின் மகளானசுகன்யா (வயது 17) கடந்த 16ம் தேதி முதல் காணாமல் போனார்.
விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி காணாமல் போனதையடுத்து பரபரப்புநிலவியது. அந்த மாணவியை பெற்றோர் பல இடங்களில் தேடியும் பலனில்லை.
இந் நிலையில் இன்று காலை அந்த பள்ளியில் இருக்கும் கிணற்றில் அந்தமாணவியின் பிணம் மிதந்தது. அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன.
அந்த மாணவி பள்ளி நிர்வாகிகளால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாகக் கூறி அப்பகுதி பொது மக்கள் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர்.
சுமார் 5,000 பொது மக்கள் பள்ளிக்குள் நுழைந்து சூறையாடினர். பள்ளிக்குச்சொந்தமான வேனை அடித்து நொறுக்கினர். மேலும் கம்ப்யூட்டர் அறைக்கும் தீவைத்தனர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. கலவரத்தை அடக்க வந்த போலீசாரும்அவர்களது வாகனங்களும் தாக்கப்பட்டன. பொது மக்களின் தாக்குதலில் ஏடிஎஸ்பிராமசாமியின் மண்டை உடைந்தது.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்மறியலிலும் இறங்கினர். இதனால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டு இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நின்றன.
இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து அங்கு ஆயுதம் ஏந்தியபோலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சாலை மறியலில் இறங்கிய பொது மக்களிடம் போலீசார் சமாதானப் பேச்சு நடத்தினர்.












Click it and Unblock the Notifications