கனடா கவுன்சிலர் தேர்தலில் தமிழர் வெற்றி
ஒன்டாரியோ:கனடாவின் மர்காம் நகர மாநகராட்சித் தேர்தலில் தமிழரான லோகன் கணபதி கவுன்சிலராகதேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழர் ஒருவர் கனடா ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். நவம்பர் 13ம் தேதிகனடாவில் ஊராட்சி தேர்தல் நடந்தது. இதில் மர்காம் மாநகராட்சித் தேர்தலில் 7வது வார்டில் போட்டியிட்டலோகன் கணபதி வெற்றி பெற்றார்.
நிதி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கணபதி நடத்தி வருகிறார். அவருக்க 3088 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். தனக்கு அடுத்து வந்த வேட்பாளரை விட 17 சதவீத வாக்குகள் அதிகம் அவருக்குக் கிடைத்தது. மொத்தவாக்குகளில் 34 சதவீத வாக்குகள் அவருக்குக் கிடைத்தன.
தனது வெற்றி குறித்து கணபதி கூறுகையில், இது மக்களின் வெற்றி. எனது அரசியல் அனுபவம், சமுதாய அறிவு,தொழில் அனுபவம் உள்ளிட்டவை இணைந்துதான் இந்த வெற்றியை எனக்குக் கொடுத்துள்ளது என்றார் கணபதி.












Click it and Unblock the Notifications