அழகாகிறது மெரீனா: கருணாநிதி ஆலோசனை
சென்னை:உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை என்ற பெருமையை உடைய சென்னை மெரீனா கடற்கரை மற்றும்எலியட்ஸ் கடற்கரை ஆகியவற்றை அழகுபடுத்தி, மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன்முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
உலகப் புகழ் பெற்ற மெரீனா கடற்கரைக்கு புதுப் பொலிவு அளித்து, எழில் சேர்க்கும் வகையில் பல்வேறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அதுதொடர்பான ஆய்வுக் கூட்டம்முதல்வர் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தலைமைச் செயலாளர் திரிபாதி,பொதுப்பணித்துறை செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மெரீனாவில் உலகத் தரம் வாய்ந்த மீன் காட்சியகம் அமைப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாகஆலோசிக்கப்பட்டது. இதேபோல எலியட்ஸ் கடற்கரையை அழகுபடுத்துவது குறித்தும் முதல்வர் ஆலோசனைநடத்தினார்.












Click it and Unblock the Notifications