For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 ஐயப்ப பக்தர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 5 ஐயப்ப பக்தர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும்என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

திருவண்ணாமலை மாவட்டம் காளியூர் கிராமத்தைச் சேர்ந்த 58 ஐயப்ப பக்தர்கள், சபரிமலை சென்று ஊர்திரும்பும் வழியில் உடுமலை திருமூர்த்தி மலை காட்டாற்று வெள்ளத்தில் குளித்தனர்.

அப்போது வெள்ளத்தில் சிக்கி ஏழுமலை, அவரது மகன் நந்தகோபால், சந்திரசேகரன், மகேந்திரன், மணிகண்டன்ஆகிய 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மணிகண்டன், சந்திரசேகரன் ஆகியோரின்உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மற்ற மூவரது உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந் நிலையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, உயிரிழந்தவர்களின்குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனஅறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X