சங்கரராமன் வழக்கு: டிச. 6க்கு ஒத்திவைப்பு
புதுச்சேரி:சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைை டிசம்பர் 6ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குபுதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செஷன்ஸ் நீதிபதி சின்னப்பாண்டிவிடுமுறையில் சென்று விட்டதால், வழக்கை 2வது கூடுதல் நீதிபதி அண்ணாமலைவிசாரித்தார்.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 17பேர் ஆஜராகவில்லை.
கடலூர் சிறையிலிருந்து கொண்டு வரப்பட வேண்டிய 9 எதிரிகளையும் போலீஸார்அழைத்து வந்து கொண்டிருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.ஆனால், மற்ற 8 பேரும் ஆஜராகாதது தொடர்பாக அவர்களது வழக்கறிஞர்களைஎழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் டிசம்பர் 6ம் தேதிக்கு நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications