ரூ495 கோடியில் விரிவாகும் சென்னை துறைமுகம்
சென்னை:சென்னை துறைமுகத்தில் ரூ.495 கோடியில் இரண்டாவது டெர்மினல்அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி முதல்வர்கருணாநிதி இதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் சென்னையில்செய்தியாளர்களிடம் கூறுகையில், கடல்சார் பயிற்சிகள், துறைமுகங்களின் வளர்ச்சிஉள்ளிட்ட கப்பல் சார்ந்த விஷயங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் தேசிய கப்பல் கழகம் சில பரிந்துரைகளை அரசுக்குஅளிக்கவுள்ளது. அதிக கண்டெய்னர்களை ஏற்றிவரும் கப்பல்களை நிறுத்துவற்குஏற்ப துறைமுக கடல் பகுதிகளை ஆழப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைசெய்யப்படும்.
தற்போது துறைமுகத்தில் உள்ள ஆழ் கடற்பகுதியில் 6,000 கண்டெய்னர்கள் கொண்டகப்பல்கள் வரை நிறுத்தலாம், ஆனால் தற்போது 2,000 கண்டெய்னர்கள் கொண்டகப்பல்கள் தான் சென்னை துறைமுகத்திற்கு வருகின்றன.
இன்னும் 5 வருடங்களுக்கு இதே ஆழத்தில் கப்பல்களை நிறுத்த முடியும். ஆனால்சர்வதேச தரத்திற்கு ஏற்றவாறு துறைமுக கடல் பகுதியை ஆழப்படுத்துவது அவசியம்.அதன் படி தற்போது உள்ள 13.5 அடியை 15 அடியாக ஆழப்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தின் இரண்டாவது டெர்மினல் ரூ.495 கோடியில்அமைக்கப்படுவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனவரி 17ம் தேதிநடக்கிறது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார் என்றார்சுரேஷ்.