ஊட்டியில் மீண்டும் நிலச் சரிவு
நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊட்டி-மைசூரூபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கன மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இதனால் மேட்டுபாளையம்-ஊட்டி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஊட்டி-மைசூரூ செல்லும் வழியில் பெரியபாறைகள் உருண்டு விழந்தது. மேலும் அப்பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால்ஊட்டி-மைசூரூ செல்லும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்கள் கூடலூர் வழியாக திருப்பி விடப்பட்டன. இந்நிலையில்கூடலூர் சாலையிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால், இவ்வழியும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் கர்நாடகா, மைசூரில் இருந்து கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் நடுவழியில் சிக்கி கொண்டுள்ளனர்.இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications