சங்கரராமன் கொலை-கஜினி அப்புவுக்கு ஜாமீன்
சென்னை:சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீன் கோரி, கஜினி முகம்மது போல விடாமல்முயற்சித்து வந்த அப்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்கொடுத்துள்ளது.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவர்அப்பு. இவர்தான் கூலிப்படையை ஏற்பாடு செய்து சங்கரராமனைத் தீர்த்துக்கட்டியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 முறையும், உச்சநீதிமன்றத்தில் ஒருமுறையும் அப்பு மனு தாக்கல் செய்தார்.
அத்தனை மனுக்களும் தள்ளுபடி ஆகி விட்டதால், தொடர்ந்து கடலூர் சிறையில்அடைக்கப்பட்டிருந்தார் அப்பு. இந் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3வதுமுறையாக அப்பு ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி தணிகாச்சலம், அப்புவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார். சங்கரராமனை சதித் திட்டம் தீட்டிக் கொலை செய்ததாக கூறப்பட்டுகைதான ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட பிற எதிரிகள் ஜாமீனில்விடப்பட்டுள்ளனர்.
அதே குற்றச்சாட்டின் கீழ் அப்புவும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கும் ஜாமீன்அளித்து உத்தரவிடுகிறேன். ரூ. 1 லட்சம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு 2நபர் ஜாமீனை மனுதாரர் வழங்க வேண்டும்.
மேலும், கிருஷ்ணகிரியில் தங்கி மறு உத்தரவு வரும் வரை அங்குள்ள நீதித்துறைநடுவர் நீதிமன்றத்தில் ஆஜாராக வேண்டும். சாட்சிகளைக் கலைக்க மாட்டேன் எனஅந்த நீதிமன்றத்தில் மனுதாரர் உத்தரவாதப் பத்திரம் வழங்க வேண்டும் என்று நீதிபதிதனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
அப்புவின் கூலிப் படையின் முக்கிய தளபதியாக விளங்கிய கொற கிருஷ்ணா என்ற காஞ்சிபுரம் ரெளடிசமீபத்தில் போலீஸ் எண்கெளன்டரில் போட்டுத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. சங்கர்ராமன் கொலைக்கு அப்புஸ்கெட்ச் போட உதவியவர்களில் கொற கிருஷ்ணாவும் ஒருவன் என்று கூறப்பட்டது. ஆனால், அவனை வழக்கில்சேர்க்க போதிய ஆதாரம் இல்லாததால் தப்பிவிட்டான்.












Click it and Unblock the Notifications