கருணாநிதியை சந்திப்பேன்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:நெய்வேலி அணல் மின் கழக ஒப்பந்த (என்.எல்.சி) ஊழியர்களின் பிரச்சினைகள்தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்திக்கப் போவதாக தேமுதிக தலைவர்விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி.யில் வேலை பார்க்கும் 10,000 ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரம்தரம் கோரிகடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்குதித்துள்ளனர். இதனால் மின் கழகத்தின் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் போராட்டத்திற்கு திமுக சார்பான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தவிர பிறதொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. கடந்த 2 நாட்களுக்கு முன் ஒப்பந்தஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் நெய்வேல் வந்த விஜயகாந்த் ஊழியர்களுடன் சேர்ந்து தானும்உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். அவருடன் அவைத் தலைவர் பண்ருட்டிராமச்சந்திரனும் கலந்து கொண்டார்.

பின்னர் உண்ணாவிரதத்தை வாழ்த்தி விஜயகாந்த் பேசுகையில், கடந்த 40ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு நிரந்தர ஊழியர்களுக்குச் சமமாக ஒப்பந்தஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சரியான சம்பளம் இல்லை,வீடு இல்லை, எந்தவித சலுகைகளும் வழங்கப்படுவதில்லை.

தீபாவளிக்கு போனஸாக கொடுத்த ரூ. 1,500 பணத்தில் ரூ. 1,000த்தை பிடிக்கப்போவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது கொடுமையான செயல். மனிதாபிமானமற்றசெயல். இதை தட்டிக் கேட்டு உண்ணாவிரதம் இருப்பதும், போராட்டம் நடத்துவதும்நியாயமான செயல்தான்.

இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் தேமுதிக தலைவர்என்ற முறையிலும் இந்தப் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன், உங்களுக்குக் கைகொடுக்கிறேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனுகொடுக்கவுள்ளேன்.

உங்களுக்கு விரைவில் நியாயம் கிடைக்க அவரை உதவக் கேட்டுக் கொள்வேன்என்றார் விஜயகாந்த்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+