கருணாநிதிக்கு பயப்பட மாட்டோம்-அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி மிரட்டல்விடுப்பது போல பேசியிருப்பதைக் கண்டு நானோ, கேரள அரசோ பயப்படமாட்டோம் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையை கடற்படையை விட்டு கேரளா ஆய்வு செய்யமுயன்றதையடுத்து முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு அவசரக் கடிதம் அனுப்பினார்.
அதில், கேரள அரசின் செயல் சட்டவிரோதமானது, அப்பட்டமான அத்துமீறல். கேரளஅரசின் இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால் டெல்லி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள மாட்டோம் என எச்சரித்திருந்தார்.
இதுகுறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில்,முல்லைப் பெரியாறு அணையை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்யவிருந்தது குறித்துஏற்கனவே தமிழகத் தரப்பிடம் தெரிவித்து விட்டோம். தேனி ஆட்சியாளருக்குஇதுகுறித்துத் தெரியும்.
அணை உள்ள இடம் கேரளாவுக்குச் சொந்தமானது. எனவே அணையைப்பார்வையிட தமிழக அரசின் அனுமதி தேவையில்லை.
கேரளாவின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும்சொத்துப் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம்.
இந்தப் பிரச்சினை தொடர்பாக கருணாநிதியின் மிரட்டலுக்கு பிரதமர் போன்ற சிலர்பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன், கேரள அரசும் பயப்படாது.கருணாநிதியின் பேச்சு ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளது என்றார் அச்சுதானந்தன்.