For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி, அச்சுதானந்தத்துடன் காரத் பேச்சு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முல்லை பெரியாறு அணை விவகாரத்தை சமூகமான முறையில் பேசித் தீர்க்குமாறு கேரள முதல்வர்அச்சுதானந்தத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

பேசித் தீர்க்க வேண்டிய இந்த விவகாரத்தை அச்சுதானந்தன் தலைமையிலான இடதுசாரி அரசு ஊதிப்பெரிதாக்கி வருகிறது.

உச்ச நீதிமன்றம் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நிலையில் கடற்படையை விட்டு ஆய்வு செய்வது,தமிழகத்தை தாக்கி அறிக்கை விடுவது என பிரச்சனையை பெரிதாக்கி வருகிறது கேரளம்.இதை எதிர்த்து தமிழக விவசாயிகள் போராட்டத்தில் குதித்து கேரள வாகனங்களை மறித்ததாலும், கேரளாவுக்குபால், உணவுப் பொருட்கள், இறைச்சி, முட்டை, காய்கறி, பழங்களை போக விடாமல் தடுத்ததாலும் கேரளம்அதிர்ச்சியடைந்தது.

இந்த விவகாரத்தில் தமிழகத்தில் ரீயாக்ஷன் மிகவும் மோசமாக இருந்ததால், தனது கட்சியின் தலைமையிடம்சரணடைந்துள்ளது கேரள இடதுசாரி அரசு.

இதையடுத்து முதல்வர் கருணாநிதியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய தலைவர் பிரகாஷ் காரத்தொலைபேசியில் பேசினார்.

மேலும் இந்த இடதுசாரிகள், திமுகவின் ஆதரவில் மத்தியில் ஆட்சியை ஓட்டிக் கொண்டிருக்கும் காங்கிரசும்இருதலைக் கொல்லி எறும்பாய் தவித்து வருகிறது. யாருக்கு ஆதரவான நிலையை எடுப்பது என்று பரிதவிக்கும்காங்கிரஸ் மார்க்சிஸ்ட் தலைமையின் உதவியை நாடியதாகத் தெரிகிறது.

இதையடுத்து கருணாநிதியிடம் பேசிய பிரகாஷ் காரத், இந்த விவகாரத்தில் சமூகமான நிலையைகடைபிடிக்குமாறு அச்சுதானந்தத்துக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

முல்லை பெரியாறு அணைப் பிரச்னையை மைலும்சிக்கலாக்கும் வகையில் செயல்படவோ, அறிக்கைவெளியிடவோ வேண்டாம் என கேரள அரசுக்கு மார்க்ஸிஸ்ட் கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டும் என காரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந் நிலையில் சாலை மறியல் போராட்டத்தை நடத்த வேண்டாம், கேரளாவுக்கு உணவுப் பொருள் சப்ளையைபாதிக்கும் வகையில் நடக்க வேண்டாம் என கருணாநிதி கோரிக்கை விடுத்ததையடுத்து விவசாயிகள்போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து சீரடையத் தொடங்கியுள்ளது. இந்த சாலைமறியலால் அதிகம் பாதிக்கப்பட்டது அய்யப்ப பக்தர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவுக்குள் நுழைய முடியாமல் சாலையிலேயே தங்கள் வாகனங்களில் ஒரு நாளை கழிக்க வேண்டியநிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X