அணை பிரச்சினையை அரசியலாக்கும் கேரளா
டெல்லி:முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்கும் பிரச்சினையை கேரள அரசு தேவையில்லாமல்அரசியலாக்குகிறது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.ஆனால் இதை நிறைவேற்றாமல் தடுக்க, கேரள அரசு சட்டசபையில், சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துநிறைவேற்றியது.
இதை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கேரளா பதில் மனுவைத்தாக்கல் செய்தது.
இந்த மனுவுக்கு தற்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப்பெரியாறு அணையின் உயரத்தை 142 அடியாக உயர்த்தலாம். அணை நல்ல ஸ்திரத்தன்மையுடன்தான் உள்ளது.இதை மத்திய நீர்வளத்துறை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் இப்பிரச்சினையை தேவையில்லாமல்கேரள அரசு அரசியலாக்குகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாக கேரள சட்டசபையில் சட்ட மசோதாவை அம்மாநில அரசு நிறைவேற்றியதுஇதை நிரூபிக்கிறது என்று பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications