பெரும் பணத்துடன் சிக்கிய கல்வி நிறுவன அதிபர்
சென்னை:டெல்லியிலிருந்து கணக்கில் வராத ரூ. 1.27 கோடி பணத்துடன் விமானம் மூலம் வந்த தஞ்சையைச் சேர்ந்த கல்விநிறுவன அதிபரை வருமான வரித் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
தஞ்சையில் பி.ஆர். குழும் நிறுவனங்கள் என்ற பெயரில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருபவர்முருகேசன். இவருக்கு சொந்தமாக தஞ்சையில் பொன்னையா ராமஜெயம் பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரிஉள்ளிட்டவை உள்ளன.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து முருகேசன், கணக்கில் வராத கருப்புப் பணத்துடன் சென்னைக்கு விமானம்மூலம் வருவதாக வருமான வரித்துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று இரவு விமான நிலையத்திற்கு விரைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், டெல்லியிலிருந்துவரும் விமானங்களை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, நள்ளிரவு 12.10 மணிக்கு டெல்லியிலிருந்து வந்தவிமானத்தில் முருகேசன் வந்தார்.
அவரை வளைத்துப் பிடித்த வருமான வரித்துறையினர், வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வைத்திருந்த பெட்டியில் ரூ. 1.27 கோடி பணம்இருந்தது தெரிய வந்தது. அதற்குரிய கணக்கு முருகேசனிடம் இல்லை.
இந்த நிலையில் தஞ்சையில் உள்ள முருகேசனுக்குச் சொந்தமான கல்லூரிகள், மேலும் 2 இடங்களில் இன்றுகாலை திருச்சி மண்டல வருமான வரித்துறை உதவி இயக்குநர் ராஜன் தலைமையில் அதிரடி சோதனைநடத்தப்பட்டு வருகிறது.
பெரும் பணத்துடன், கல்வி நிறுவன அதிபர் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.