தீண்டாமை ஒழிப்புக்கு தேசிய விருது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:தீண்டாமை ஒழிப்புக்காக பாடுபடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்களுக்கு ஆண்டுதோறும் தேசியஅளவில் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் மக்களவையில், சமூக நீதி மற்றும் அமலாக்கத் துறை அமைச்சர் மீரா குமார்தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2007ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படும். மொத்தம் நான்கு விருதுகள் இப்பிரிவின்கீழ் வழங்கப்படும்.

தனி நபருக்கான விருது பாராட்டுப் பட்டயம் மற்றும் ரூ. 2 லட்சம் பரிசுத் தொகையைக் கொண்டதாக இருக்கும்.நிறுவனத்திற்கு வழங்கப்படும் விருது ரூ. 5 லட்சம் பரிசுப் பணம் மற்றும் பாராட்டுப் பட்டயத்தைக் கொண்டதாகஇருக்கும்.

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டலம் என நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து இருபிரிவிலும் தலா ஒரு விருது என மொத்தம் நான்கு விருதுகள் வழங்கப்படும்.

இந்தியாவைச் சேர்ந்த அனைத்து தொண்டு நிறுவனங்கள், மனித வள மேம்பாட்டு அமைப்புகள், தனி நபர்கள்விருது பெறத் தகுதி படைத்தவர்கள் ஆவர்.

விருது பெறத் தகுதி உடையவர்கள் முதல் கட்டமாக திறனறி குழுவால் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர்அவர்களிலிருந்து விருது பெறுபவர்களை தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும்.

2007ம் ஆண்டுக்கான விருது பெறுவதற்கான விண்ணப்பங்களை அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரைவழங்கலாம் என்றார் மீரா குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+