டிச. 6: கோவையில் அதி தீவிர பாதுகாப்பு
கோவை:அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நெருங்குவதையொட்டிகோவை நகரில் இன்று முதல் 10 நாட்களுக்கு தீவிர போலீஸ் கண்காணிப்புமேற்கொள்ளப்படவுள்ளது.
கோவையில் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டதன்நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கோவை நகரின்அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், முக்கிய இடங்கள்,வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போலீஸார் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை போலீஸார் தவிர அதிரடிப்படையினர், சிறப்புக் காவல் படையினரும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 2000 போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். கோவை நகரின் அனைத்து எல்லைகளிலும் வாகனத்தணிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம்வருவதால் இன்று முதல் 10 நாட்களுக்கு கோவை நகரில் தீவிர கண்காணிப்பும்,பாதுகாப்பும் தொடரும் என மாநகர காவல்துறை ஆணையர் காந்திராஜன்தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications