சங்கரராமன் கொலை வழக்கு-தி.க. போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:காஞ்சி சங்கராச்சாரியார்கள் சம்பந்தப்பட்ட சங்கரராமன் கொலை வழக்கை விரைவாகநடத்தக் கோரி கி.வீரமணி தலைமையில் திராவிடர் கழகத்தினர் சென்னையில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலைசெய்யப்பட்ட வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையசங்கராச்சாரியார் விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு தற்போதுஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்த வழக்கு தற்போது புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.வழக்கு புதுச்சேரிக்கு வந்தும் கூட இன்னும் விசாரணை தொடங்காமல் உள்ளது.முதலில் போலீஸ் தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆஜராக புதுச்சேரிவழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கடைசியில் தமிழக வழக்கறிஞர்களேஆஜராகலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தற்போது ஜெயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட ஒரு மனு உச்சநீதிமன்றத்தில்நிலுவையில் இருப்பதால் வழக்கு விசாரணை தொடங்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், வழக்கை விரைவாக நடத்தி முடிக்கக் கோரி தி.க. சார்பில்சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தி.க. தலைவர் கி.வீரமணிதலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், முக்கியமானஇந்த வழக்கை தாமதம் செய்யாமல் விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+