சென்னையில் பிடிபட்ட 1000 லிட்டர் சுண்டகஞ்சி
சென்னை:சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில் ஆயிரம் லிட்டர் ரைஸ்பீர் எனப்படும் சுண்டக்கஞ்சி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை பெசன்ட் நகர் கடற்பகுதியில் உள்ள ஓடைக்குப்பம் பகுதியில் போதை தரும் ரைஸ் பீர் விற்கப்படுவதாகபோலீசாருக்கு தகவல் கிடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஆயிரம் லிட்டர் ரைஸ் பீர் பறிமுதல் செய்யப்பட்டது. இததொடர்பாக சரவணன் (42), சுதா (25)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுகாவலில் வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மேலும் 5 பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சுண்டக்கஞ்சி ரைஸ் பீர் ஆனது:
சுண்டக்கஞ்சி கூலித் தொழிலாளர்களின் பீர். இதை அதிக விரும்பி குடிப்பவர்கள் தினக்கூலி தொழிலாளர்கள் தான். சுண்டக்கஞ்சி விற்பவர்கள், இதற்கு ரைஸ்பீர் என பெயரை மாற்றி விற்க தொடங்கினர்.
இதனால் சுண்டக்கஞ்சி அதிக அளிவில் விற்பனை செய்யப்பட்டது. இதை நடுத்தர மக்கள் முதல் கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள் வரை இப்போது வாங்கி குடித்துவருகின்றனர். இதன் வியாபாரத்தில் ஓடைக்குப்பத்தை சேர்ந்த பல குடும்பங்கள் செய்து வருகின்றனர்.