சித்தி மகளை கற்பழித்து கொன்ற காம கொடூரன்
சென்னை:சென்னை அருகே நீலாங்கரையில் சித்தி மகளைக் கற்பழித்த காமக் கொடூரன்,சித்தியையும், அவரது மகளையும் கொலை செய்துவிட்டு தானும் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டார்.
மதுரையைச் சேர்ந்த சந்திரன் நீலாங்கரை வெட்டுவாங்கணி பகுதியில் வசித்து வந்தார்.சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். அவரது மனைவி காசியம்மாள் (45).இவருக்கு பத்மாவதி (17), ஹேமாவதி (10) என இரு மகள்கள். இதுதவிர கற்பகம்என்ற 6 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார் காசியம்மாள்.
வீட்டு வேலைகள் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார் காசியம்மாள்.வீட்டில் ஆண் துணை இருந்தால் நல்லது என்று கருதி, மதுரையில் இருந்த சந்திரனின்அண்ணன் மகன் முருகனை வெட்டுவாங்கணிக்கு வரவழைத்து தனது வீட்டில் தங்கவைத்தார் காசியம்மாள்.
சிறு சிறு வேலை செய்து வந்தார் முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.சித்தப்பா வீட்டுக்கு வந்து தங்கியிருந்த முருகனுக்கு, தங்கை உறவு முறை கொண்டபத்மாவதி மீது காம வெறி பிறந்துள்ளது.
இந் நிலையில் நேற்று இரவும் வீட்டுக்கு குடிபோதையில் வந்த முருகன் சித்திகாமாட்சியம்மாளியிடம் சாப்பாடு சரியில்லை என்று தகராறு செய்து விட்டுத் தூங்கச்சென்று விட்டார்.
நள்ளிரவில் எழுந்த முருகன், பத்மாவதி படுத்திருந்த அறைக்குள் நுழைந்து கதவைஉள்பக்கமாக பூட்டினார்.
அப்போது சத்தம் கேட்டு எழுந்த காசியம்மாள் முருகனை வெளியே வருமாறுகூறியுள்ளார். ஆனால் முருகன் வரவில்லை. அறைக்குள் வைத்து பத்மாவதியைபலாத்காரம் செய்துள்ளார்.தப்பிக்க முயன்று கதறிய பத்மாவதியின் குரலை அடக்க தலையணையை அவரதுமுகத்தில் அமுக்கியபடி கற்பழித்துள்ளார். இதில் பத்மாவதி மூச்சுத் திணறி பரிதாபமாகஇறந்து போனார்.
பின்னர் வெளியே வந்த முருகன், சித்தி காசியம்மாளையும் துண்டால் கழுத்தைநெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் போதையில் தூங்கிவிட்டார்.
இன்று காலை போதை தெளிந்து எழுந்த முருகன், இரண்டு கொலைகளை செய்தபயத்தில் தானும் தூக்குப் போட்டுத் தானும் தற்கொலை செய்து கொண்டார்.
ஹேமாவதி எதிர் வீட்டில் போய் தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.இல்லாவிட்டால் முருகன் அவரையும் கொன்றிருப்பார். அதேபோல கற்பகம் அயர்ந்துதூங்கியதால் சத்தம் போடவில்லை. இதனால் அந்தக் குழந்தையும் தப்பிவிட்டது.
காலையில் கண் விழித்துப் பார்த்து கற்பகம் போட்ட கதறலில்தான் அக்கம்பக்கத்தினருக்கு நடந்த கொடூரம் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications