போலீஸ் பாதுகாப்புடன் ஓமலூர் பள்ளி திறப்பு

Subscribe to Oneindia Tamil

ஓமலூர்:பிளஸ்டூ மாணவியின் தற்கொலையால் சர்ச்சையில் சிக்கிய ஓமலூர் பாத்திமா மகளிர்மேல்நிலைப்பள்ளி இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.

ஓமலூரில் உள்ள பாத்திமா மகளிர் மேல் நலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கிப்படித்து வந்த பிளஸ்டூ மாணவி சுகன்யா சமீபத்தில் அங்குள்ள கிணற்றில் பிணமாகக்கிடந்தார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஓமலூர் பொதுமக்கள் பெரும் கூட்டமாக திரண்டுபள்ளிக் கூடத்தை சூறையாடினர். பள்ளி நிர்வாகமே சுகன்யாவின் சாவுக்குக் காரணம்என அவர்கள் குற்றம் சாட்டினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 பள்ளி ஊழியர்களும், பள்ளி மீதான தாக்குதல்தொடர்பாக 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைஎடுத்தது. முதல் கட்டமாக பள்ளி தலைமை ஆசிரியை மாற்றப்பட்டார். இதையடுத்துஇன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று பள்ளி திறக்கப்பட்டது.

பள்ளிக்கு வெளியேயும், உள்ளேயும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் முன்னிலையில் பள்ளிக் கூடம்திறக்கப்பட்டது. பின்னர் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளுடன் ஆட்சித்தலைவர் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளைக் கூறினார்.

இன்று 60 சதவீத மாணவிகள் வந்திருந்ததாக ஆட்சித் தலைவர் மதிவாணன் பின்னர்செய்தியாளர்கள் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+