பேபி டேம் உடைப்புப் போராட்டம் தடுப்பு
குமுளி:முல்லைப் பெரியாறு அணைக்குப் பின்னால் உள்ள பேபி அணையை உடைத்துவாய்க்கால் வெட்டும் போராட்டத்தில் நடத்தச் சென்ற 2000க்கும் மேற்பட்டோரைகேரள போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டக்கோரி பல்வேறு தமிழர் அமைப்புகள், அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள்உள்ளிட்டவை இணைந்து நேற்று கேரள எல்லையோரம் உள்ள தமிழக நகரங்களில்பொருளாதார தடைப் போராட்டத்தை நடத்தினர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டத்திற்கு எதிராக, கேரளாவில் உள்ள ஐந்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள்போட்டி போராட்டத்தை நேற்று நடத்தினர். முல்லைப் பெரியாறு அணை மீட்புஇயக்கம் என்ற பெயரில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு அதன் தலைவர் ஜோய்நிரம்பேல் தலைமை தாங்கினார்.
சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கடப்பாரை, பிக்காசு, மண்வெட்டிகளுடன் பேபிஅணை நோக்கி ஊர்வலமாக கிளம்பினர். அவர்களை இந்துஸ்தான் பேப்பர் மில்ஸ்பகுதியில், போலீஸாரும், அதிகாரிகளும் தடுத்து நிறுத்தினர். இதற்கு மேல் செல்லமுடியாது என்று அவர்கள் கூறியதால், போராட்டக்காரர்கள் அங்கேயே நின்றுகோஷமிட்டனர்.
முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தமிழகத்தலைவர்களை விமர்சித்து கோஷமிட்ட பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications