2 விமானங்கள்..100 பேர்..ஜெ டெல்லி பயணம்
சென்னை:டெல்லியில் நாளை நடைபெறவுள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் 100 பேர் இன்று இரு விமானங்கள் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில்அதிமுகவினர் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் பங்கேற்க 2 விமானங்களில் அதிமுகவினர் இன்று புறப்பட்டு சென்றனர். அதிமுக மாவட்டசெயலாளர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 29 பேர் காலை 6.40 மணிக்கு விமானத்தில்புறப்பட்டுச் சென்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பகல் 1.30 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் புறப்பட்டார்.அவருடன் எம்எல்ஏக்கள் அனைவரும் சென்றனர். அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், பிற மாநில அதிமுகசெயலாளர்கள் ஆகியோரும் புறப்பட்டு சென்றனர்.
டெல்லியில் அதிமுகவினர் 100 பேரும் ஹோட்டல்களிலும், தமிழக அரசு விருந்தினர் மாளிகையிலும் இன்றுஇரவு தங்குகிறார்கள். நாளை காலை சிலை திறப்பு விழா முடிந்ததும் 100 பேரும் நாளை மாலை விமானம் மூலம்சென்னை திரும்புகிறார்கள்.
இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர், சோனியாகாந்திக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்திருக்கும்நிலையில் அவர்கள் நாளை சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்வது குறித்து இன்னும் உறுதியான அறிவிப்புவரவில்லை.
நாளை மறுதினம் மறைந்த முரசொலி மாறனின் சிலை திறக்கப்படுகிறது. இதற்காக நாளை முதல்வர் கருணாநிதிடெல்லி செல்கிறார்.